Chikkamagaluru: பள்ளி கல்லூரி விடுமுறை விட்டதும் எங்காவது செல்லலாம் என முடிவு செய்தால் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்பவர்கள் கர்நாடக மாநிலத்தில் குடகு ஹாசன் சிக்கமகளூர் பகுதிகளை முடிவு செய்வார்கள் அதுவும் கடந்த மே மாதத்திலிருந்து சிக்கமகளூரில் நிரந்தரமாக மழை பெய்து இயற்கை எழில் மற்றும் சுற்றுச்சூழல் மிகவும் அற்புதமாக இருக்கிறது
இங்குள்ள அருவிகளில் அனைத்திலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது அந்த வகையில் சிக்கமகளூர் மாவட்டம் முல்லையனகிரி பாபாபுடன் கிரி ஜெரி அருவி உட்பட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு முறைப்படி தினம் தோறும் தினந்தோறும் காலை 600 மாலை 600 அனுமதிக்கின்றனர் வாகனங்களுக்கு இதனால் இ பாஸ் போட முடியாமல் கிரி செல்ல முடியாமல் ஒரு சிலர் திரும்பிச் சென்றனர் மேலும் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது தசரா பண்டிகை விடுமுறை இருப்பதால் வெளி மாநிலம் வெளி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்த வண்ணம் இருந்தன
தரிகெரெ தாலுகா கெம்மன்குண்டி சுற்றுலா தளத்தில் இ பாஸ் இல்லாமல் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்து அங்கிருக்கும் இயற்கை காட்சியில் மற்றும் மலைப்பகுதிகளை கண்டு ரசித்தனர் கெம்மன் குண்டியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹெப்பே அருவி மிகவும் புகழ்பெற்ற அருவி ஆகும் இந்த அறிவிக்கு செல்வதற்கு வனத்துறை சார்பாக ஒரு நபருக்கு 600 ரூபாய் வாங்கப்பட்டு அவர்களுக்குரிய வாடகை ஜீப்பில் கூட்டிச்சென்று அருவியை கண்டு ரசித்து வருகின்றனர் இதனால் கடந்த சில தினங்களாகவே 35 வாடகைக்கு ஜீப்புகள் உள்ள நிலையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானவர்கள் காலை முதலே அங்கு கூட்டம் அதிகரிக்கிறது மாலை வரை ஒரு சிலர் அருவிக்கு செல்ல முடியாமல் திரும்பி கள்ளத்தி அருவியில் குளிதது அங்கங்கே கிடைக்கும் சுற்றுலா தலங்களை பார்த்துச் செல்கின்றனர்
நேற்றும் இன்றும் ஆயிரக்கணக்கானோர் எப்படி அருவிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தன்ர் ஹெப்பே அருவிக்குச் சென்றவர்கள் உயரத்திலிருந்து தண்ணீர் கொட்டும் இயற்கை காட்சியை ரசித்து அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்கின்றனர் அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இருப்பினும் ஓடும் தண்ணீரில் குளித்து மகிழ்கின்றனர் நிரந்தரமாக சுற்றுலா தளங்களில் கூட்டம் அலைமோதுவதால் சிக்க மகளூரில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா வாகனங்களாக காட்சி அளிக்கிறது உணவகங்களில் உணவு கிடைக்காமல் தங்குவதற்கு இடம் கிடைக்காமலும் வரும் சுற்றுலா பயணிகள் தவிக்கின்றனர் முன்பதிவு செய்தவர்கள் மகிழ்ச்சியாக சுற்றுலா பயணிகளை ரசித்து செல்கின்றனர்



