Racer Kumar Dieds :சென்னையில் அதிர்ச்சி: கார் பந்தய விபத்தில் வீரர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அருகே உள்ள இருங்காட்டுக் கோட்டையில் (Racer Kumar Dieds) கார் பந்தய மைதானம் அமைந்துள்ளது. அங்கு கார் பந்தய போட்டி இன்று நடைபெற்றது.

அதன்படி போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் குமார் 59, என்பவர் பங்கேற்றார். போட்டியில் பங்கேற்றபோது குமாரின கார் விபத்துக்கு உள்ளானது. இதில் அவரது கார் பலத்த சேதத்திற்கு உள்ளானது. இதனால் அங்கு இருந்த ஊழியர்கள் வீரர் குமாரை படுகாயங்களுடன மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் பந்தய நடைபெற்ற இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவர் உயிரிழந்திருப்பது சக வீரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.