Stabbing case in Shivamogga :சிவமொக்காவில் கத்திகுத்து வழக்கு: பி.ஒய்.விஜயேந்திரா மெகன் மருத்துவமனைக்கு விஜயம்

BY Vijayendra: சிவமொக்கா நகரில் உள்ள காந்தி பஜாரில் கத்தியால் குத்தப்பட்டு மெகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஜக மாநில துணைத் தலைவர் பிரேம்சிங்கை இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.

சிவமொக்கா: Stabbing case: சிவமொக்கா காந்தி பஜாரில் கத்தியால் குத்துப்பட்டு மெகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரேம் சிங்கை இன்று பாஜக மாநில துணைத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா சந்தித்து நலம் விசாரித்தார். இதைத் தொடர்ந்து பேசிய பி.ஒய்.விஜயேந்திரா, பிரேம் சிங்கின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.

கத்தியால் குத்தப்பட்ட பிரேம் சிங்கிடம் நலம் விசாரித்தேன் (I inquired after Prem Singh). கடவுள் பெரியவர், ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. மேலும் எட்டு நாட்களுக்கு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்.

இங்கு யார் வேண்டுமானாலும் எதையும் செய்யலாம் என்ற உணர்வு உள்ளது. இது தொடர்பாக எங்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். நாங்கள் அனைவரும் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். இந்த வழக்கின் பின்னணியில் எந்த அமைப்பு உள்ளது (Which texture is in the background) என்பதனை தற்போது சொல்ல முடியாது. ஏனென்றால் அது எல்லோருக்கும் அறிந்த ஒன்று. இது வெளிப்படையான ரகசியம் என்று பூடகமாக தெரிவித்தார்.

இதற்கு முன், இதே பிரச்னை குறித்து ஷிமோகா நகரில் பேசிய பி.ஒய்.விஜயேந்திரா, இந்த பதர்களுக்கு நாட்டின் வரலாறு தெரியாது. இவர்கள் அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட பெருமக்களுக்கு அவமானம் (Shame on the freedom fighters) செய்திருக்கிறார்கள். மங்களுரில் நடந்தது இப்போது சிவமொக்காவிலும் திரும்ப நடைபெற்றுள்ளது. கத்தியால் குத்தியவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய மாட்டோம். அவர்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்ற‌னர் என்றார்.

சிவமொக்காவில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் (Independence Day celebration) சாவர்கர் புகைப்படம் வைத்தது தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில் 2 பேர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தனர். காயமடைந்த அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சர்ச்சையால் பதட்டத்தில் உள்ள சிவமொக்கா நகரம் மற்றும் பத்ராவதி நகரில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு ஊர்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் செல்வமணி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து சிவமொக்கா, பத்ராவதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.