Building Collapses In Chennai: சென்னையில் கட்டிடம் இடித்து பெண் ஒருவர் பலி

சென்னை: A woman died after an old building collapsed in Annasalai, Chennai. சென்னை அண்ணாசாலையில் பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை ஜெமினி பாலம் அருகே இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் இன்று உயிரிழந்தார். அதே நேரத்தில் கட்டிடத்தின் அருகே நடைபாதையில் நடந்து சென்ற மற்றொரு பெண்ணும் காயமடைந்தார். கிரீம்ஸ் சாலை மற்றும் அண்ணாசாலை நோக்கி செல்லும் சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அண்ணாசாலையில் உள்ள பழமையான பாழடைந்த கட்டிடத்தை இடிக்கும் பணி ஒரு வாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. இதனைத்தொடர்ந்து இன்றும் அந்த கட்டிடத்தை இடிக்கும் பணி நடைபெற்றது. ஜேசிபி மூலம் கட்டிடத்தின் ஒரு பகுதியை தொழிலாளர்கள் இடித்துக் கொண்டிருந்த போது, திடீரென சுவர் இடிந்து நடைபாதை அருகே அவ்வழியாக சென்றவர்கள் மீது விழுந்தது. இதில், 2 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

உடனே போலீசார் விரைந்து வந்து சிக்கிய பெண்களை மீட்டனர். எனினும் வங்கி ஊழியரான பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். அவர் பெயர் பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த மற்றொரு பெண் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எந்த வித அடையாளங்களோ, நிறுத்தப் பலகைகளோ இன்றி, பரபரப்பான நாளில் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், இரவு நேரத்திலும் பணி நடந்திருக்க வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். இந்த விபத்தால் அந்த சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.