Booking for Pongal Special Train starts today: பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று துவக்கம்

சென்னை: The reservation for the special train on the occasion of Pongal started from 8 am today. பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வருவவது வழக்கம். அதன்படி, சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகள் வசதிக்காக தாம்பரம்-திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட11 சிறப்பு கட்டண ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. தாம்பரத்திலிருந்து ஜன. 12-ம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்பு கட்டண ரயில் (06021) புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலியை அடையும். மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து ஜன.13-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் (06022) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.

தாம்பரத்தில் இருந்து ஜன.13-ம் தேதி இரவு 7.30 மணிக்கு சிறப்பு ரயில் (06041) புறப்பட்டு, மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து ஜன.16-ம் தேதி மாலை 5.10 மணிக்கு சிறப்பு ரயில்(06042) புறப்பட்டு, மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரத்தை வந்த டையும்.

இதுதவிர, கொச்சுவேலி-தாம்பரம்(06044-06043), எர்ணாகுளம்- சென்னை சென்ட்ரல் (06046-06045), தாம்பரம்-திருநெல்வேலி (06057-06058) ஆகிய 3 சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.