Arudra darshan at Thanjavur Periyakovil: தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனத்தை (Arudra darshan at Thanjavur Periyakovil) முன்னிட்டு நடராஜருக்கு இன்று (ஜனவரி 6) அபிஷேகம் நடைபெற்றது. புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மதியம் 2.30 மணிக்க நடக்க இருக்கிறது.

தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமாள் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தில் ஆண்டு தோறும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

மேலும் இந்த ஆண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஐம்பொன்னாலான நடராஜ பெருமானுக்கு விபூதி, பால், தயிர், பழங்கள், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.