Minister Senthil Balaji :ஆதார் அட்டை இணைப்பால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: Aadhaar card linking will not affect free electricity: Minister Senthil Balaji : மின் பயனாளர்கள் தங்களது ஆதார் எண்ணை மின் கணக்கீட்டு எண்ணுடன் இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று தமிழக மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அவர் அளித்த பேட்டி: வரும் 9 ஆம் தேதி முதல் எதிர்பார்க்கப்படும் கன மழையை எதிர்கொள்வதற்கு மின் வாரிய அலுவலர்கள் அனைவரும் உரிய முன்னெச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்கக் (It is requested to be prepared with precaution) கேட்டு கொள்ள‌ப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய கணக்கெடுப்பு அவசியம் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது (The authorities have been advised that a survey of the damage caused by the rains is necessary). கடந்த ஜூன் மாதம் தொடங்கி ஒவ்வொரு நாளும் சிறப்பு பராமரிப்பப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு 44 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன‌. சென்னை உள்பட எந்த இடத்திலும் மின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆதார் அட்டை எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதால், 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.