150-year-old tree that caught fire: தீப்பிடித்து எரிந்த 150 ஆண்டுகால மரம்; செஞ்சி அருகே பரபரப்பு

செஞ்சி: A 150-year-old tree that caught fire. செஞ்சி அருகே 150 ஆண்டுகள் பழமையான மரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி-திண்டிவனம் சாலையில் உள்ள வடவானூர் பஸ் நிறுத்தம் அருகே சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த காட்டுவாகை மரம் இருந்து வந்தது. இந்த மரம் அந்த பகுதி மக்களின் நிழலுக்கான ஒதுங்கும் இன்றியமையாத ஒன்றாக இருந்தது.

இந்த நிலையில் இந்த மரத்திலிருந்து நேற்று புகை வெளியேற ஆரம்பித்தது. அடுத்த சில நிமிடங்களிலேயே மரம் முழுவதும் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. மேலும் அப்பகுதியில் காற்று வீசியதால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர், தகவலின் பேரில் அங்கு விரைந்த செஞ்சி தீயணைப்பு மற்றும் மீட்பு குழு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மரத்தில் பற்றி எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்தனர்.

இதனையடுத்து, மரம் முழுவதுமாக எரியாமல் காப்பாற்றப்பட்டது. மர்ம நபர்கள் யாரேனும் தீப்பற்றக் கூடிய ரசாயன பொருட்கள் அல்லது பட்டாசுகளை மரத்தில் போட்டு சென்று இருக்கலாம். அதன் மூலம் மரம் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என தீயணைப்பு மற்றும் மீட்பு குழு வீரர்கள் சந்தேகம் அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.