Metro Water appointed 15 special officers: குடிநீர் பிரச்னைகளை தீர்க்க 15 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னை: Metro Water appointed 15 executive engineers as special officers to monitor the work in 15 zones.சென்னையில் 15 மண்டலங்களில் குடிநீர், கழிவுநீர் பணிகளை கண்காணிக்க 15 செயற்பொறியாளர்களை சிறப்பு அதிகாரிகளாக வாரியம் நியமித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், நவம்பரில் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை கண்காணிக்க ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 15 சிறப்பு அதிகாரிகளை சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (மெட்ரோ வாட்டர்) நியமித்துள்ளது.

நவம்பர் மாதம் முழுவதும், மழைக்காலத்தில் மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் மூலம் இரவு நேரங்களில் களப்பணி மேற்கொள்ளப்படும். இதற்காக 15 மண்டலங்களில் பணிகளை கண்காணிக்க 15 செயற்பொறியாளர்களை சிறப்பு அதிகாரிகளாக வாரியம் நியமித்துள்ளது.

இந்த சிறப்பு அலுவலர்கள் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வர். மேலும், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் தொடர்பான குறைகளை பின்வரும் அலுவலர்களை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.