Port of Spain: முன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

Image credit: Twitter.

போர்ட் ஆப் ஸ்பெயின் : Indian team won the 3rd one day : போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் தவாண், சுப்மன் கில் அரைசதம் விளாசினர். பந்துவீச்சில் கலக்கிய சாஹல் 4 விக்கெட் வீழ்த்த, 119 ரன் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.

மேற்கு இந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது. 3-வது போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் (Port of Spain) நடந்தது. இந்திய அணியில் அவேஷ் கான் நீக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா தேர்வானார். மேற்கு இந்திய தீவுகள் அணியில் அல்ஜாரி ஜோசப், ராவ்மன் பாவெல், ஷெப்பர்டுக்கு பதிலாக ஜேசன் ஹோல்டர், கீமோ பால், கார்டி இடம் பிடித்தனர். ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் ஷிகர் தவாண் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு கேப்டன் ஷிகர் தவாண், சுப்மன் கில் ஜோடி (Shikhar Dhawan and Subman Gill) நல்ல துவக்கம் தந்தது. ஜேசன் ஹோல்டர் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை தொடங்கினார் தவாண். மறுமுனையில் ஒத்துழைப்பு தந்த சுப்மன்கில், ஜெய்டன் சீல்ஸ் பந்தை எல்லை கோட்டிற்கு அனுப்பினார். பவர்-பிளே முடிவில் (முதல் 10 ஓவர்) இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 47 ரன் எடுத்திருந்தது. ஹோல்டர் வீசிய 12வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த தவாண், ஹைடன் வால்ஷ், கைல் மேயர்ஸ் பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். பொறுப்பாக ஆடிய இவர், ஒருநாள் போட்டி அரங்கில் தனது 37வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் அசத்திய சுப்மன்கில், தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 113 ரன் எடுத்திருந்த போது வால்ஷ் பந்தில் தவாண் (58) அவுட்டானார்.

இந்திய அணி 24 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 115 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் நிறுத்தி (Play stopped due to rain) வைக்கப்பட்டது. பின் தலா 40 ஓவர்களாக போட்டி மாற்றப்பட்டது. பின் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் (44 ரன்) நம்பிக்கை அளித்தார். சூர்யகுமார் யாதவ்(8 ரன்) ஏமாற்றம் அளித்தார். சுப்மான் கில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 36 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 225 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. சுப்மன் (98), சாம்சன் (6) அவுட்டாகாமல் இருந்தனர். டக்வொர்த் லீவிஸ் முறைப்படி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 35 ஓவரில் 257 என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

2 -வது ஓவரில் மேற்கு இந்திய தீவுகள் (West Indies) அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் சிராஜ். அந்த ஓவரின் முதல் பந்தில் மேயர்சை (0) போல்ட் ஆக்கிய அவர், 3வது பந்தில் புரூக்சையும் (0) காலி செய்தார். சிறிது நேரம் நிலைத்த சாய் ஹோப் (22 ரன்) சாஹல் பந்தில் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். கிங் (42 ரன்) அக்ஸர் பாட்டீல் பந்திலும், கேப்டன் பூரண் (42 ரன்) பிரசித்தி கிருஷ்ணா பந்திலும் வேகமாக நடையை கட்டினர். டெயில் எண்டர்களை யுவேந்திர சஹால் வரிசையாக பெவிலியனுக்கு திருப்பி அனுப்பி வைக்க, மேற்கு இந்திய தீவுகள் அணி 26 ஓவரில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சாஹல் 17 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிராஜ், தாக்கூர் தலா 2, அக்சர், பிரசித் தலா ஒரு விக்கெட் கைபற்றினர்.

டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, 119 ரன் (By 119 runs) வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை சுப்மான் கில்லுக்கு கிடைத்தது. மேற்கு இந்திய தீவுகளில் விளையாடிய இந்திய அணியில் இளம் வீரர்கள் ஒரு சிலர் சொதப்பினாலும், இறுதி போட்டியில் சுப்மன்கில், ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் நம்பிக்கை அளித்துள்ளனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்துள்ளார். வேகபந்து வீச்சாளர்களுக்கு சிறந்து விளங்கும் மேற்கு இந்திய தீவில் யுவேந்திர சஹால் சிறப்பாக பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.