IPL: கேப்டனாக ரிஷாப் பண்ட் சிறப்பாக செயல்படுகிறார் – சுரேஷ் ரெய்னா

கேப்டனாக ரிஷாப் பண்ட் சிறப்பாக செயல்படுகிறார்
கேப்டனாக ரிஷாப் பண்ட் சிறப்பாக செயல்படுகிறார்

IPL: 15வது ஐபிஎல் சீசன் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேயில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் 4 வெற்றி ,5 தோல்வி என புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது .

இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி -ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன .

இந்நிலையில் ரிஷாப் பண்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையில் ஈடுபட்டு வரும் சுரேஷ் ரெய்னா கூறுகையில் ;

ரிஷாப் பண்ட் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார், அவர் குல்தீப் யாதவை நன்றாக பந்துவீச்சில் பயன்படுத்தி வருகிறார் . ஆனால் ஒரு பேட்ஸ்மேன் ஆக பண்ட் இன்னும் அதிரடியாக .விளையாடவில்லை . அவருக்குப் பின்னால் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இருக்கிறார் . அவரிடம் (பண்ட் ) இருந்து விரைவில் பெரிய இன்னிங்ஸ் வர உள்ளது .இவ்வாறு கூறியுள்ளார்.

Captain Rishabh Pant has been doing great but batter Rishabh Pant needs to fire: Suresh Raina

இதையும் படிங்க: TN Government: 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் கிடையாது- அமைச்சர் அறிவிப்பு