IPL: டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு

ipl-2022
டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு

IPL: ஐபிஎல் 15-வது சீசன் பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடர் தற்போது பிளே ஆப் நோக்கி நகர்ந்து வருகிறது. குஜராத் மற்றும் லக்னோ அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

மீதம் இருக்கும் இரண்டு இடங்களுக்கு டெல்லி, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் போட்டி போடுகின்றன. ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணியை விட ராஜஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது. மும்பை பிரபோர்னே மைதானத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இன்றைய போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் முதல் இரண்டு இடங்களுக்குள் நுழைய ராஜஸ்தான் அணிக்கு அதிக வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறினாலும் ஆறுதல் வெற்றி பெரும் முனைப்புடன் சென்னை அணி களமிறங்குகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சிவம் துபே-க்கு பதில் இந்த போட்டியில் ராயுடு மீண்டும் வந்துள்ளார்.

இதையும் படிங்க: TN Schools: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாகிறது