3rd Odi New Zealand Bowling: இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

இந்தூர்: நியூசிலாந்து கிரிக்கெட் (3rd Odi New Zealand Bowling) அணி இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இரண்டு அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

அதன்படி ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டி மதியம் நேரப்படி 1.30 மணியளவில் தொடங்கியது. அப்போது டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்மூலம், முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகின்றனர். இந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்திய அணி விளையாடி வருகிறது குறிப்பிடத்தக்கது.