Shatrughan Sinha Interview: பிரதமர் பதவிக்கான போட்டியில் ராகுல் முன்னணியில் இருக்கிறார்: சத்ருகன் சின்ஹா எம்.பி.

கொல்கத்தா: நடிகரும் திரிணாமுல் காங்கிரஸ் (Shatrughan Sinha Interview) கட்சியின் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை சமீபகாலத்தில் நாடு கண்ட மிகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க யாத்திரையாக இருக்கிறது. இதனை கடந்த 1990ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அத்வானி நடத்திய ராமர் ரத யாத்திரையுடன் ஒப்பிட்டு சொல்லலாம்.

தற்போதைய நிலையில் பொதுமக்களின் நம்பிக்கைக்கு உரியவராக ராகுல் உயர்ந்துள்ளார். இந்த யாத்திரைக்கு பின்னர் எதிர்க்கட்சி முகாமில் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் இருக்கிறார். எனவே அந்த பதவியில் மிகவும் சிறப்பாக செயல்படக்கூடியராகவும் உள்ளார்.

மேலும் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையை மூன்று மாதங்களில் சத்ருகன் சின்ஹா புகழ்ந்திருப்பது இது இரண்டாவது முறையாகும். வாஜ்பாய், அத்வானி காலக்கட்டத்தில் பா.ஜ.க.வின் நட்சத்திர பிரசார பேச்சாளராக விளங்கியிருக்கும் சத்ருகன் சின் அந்த கட்சியில் இரண்டு முறையாக எம்.பி.யாக வெற்றி பெற்றார். அதன் பின்னர் 2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். அங்கிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ராகுல் காந்தியின் யாத்திரையை புகழ்ந்து பேசியிருப்பது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே செல்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.