O. Paneer Selvam : அதிமுகவை யாராலும் பிரிக்கவோ, மிரட்டவோ முடியாது: ஓ. பன்னீர் செல்வம்

திருச்சி: No one can divide or threaten AIADMK: O. Paneer Selvam : அதிமுகவை யாராலும் பிரிக்கவோ, மிரட்டவோ முடியாது என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் (Durai. Govindarajan) உடலுக்கு அஞ்சலி செலுத்த விமானத்தில் திருச்சி வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் இருந்திருந்திருக்கிறது. தொண்டர்களை எந்த நேரத்திலும் பிளவுபடுத்தி பார்க்க முடியாத வகையில் தான் நிலைத்து நிற்கிறது. அதிமுகவில் எந்தவிதமான சிறு சேதமும் இல்லை. சிறு சிறு பிரச்சினைகள் இடையில் வரும். அது சரியாக போய்விடும். அனைத்து தொண்டர்களும் ஒற்றுமையாகத்தான் உள்ளார்கள்.

தலைமையில்தான் பிரச்னை என்கிற மாயத்தோற்றம் உருவாகி உள்ளது. அது சரியாக போய்விடும். தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். அதிமுக உடன் கூட்டணி வைக்க தயார் என்று டிடிவி தினகரன் கூறிய கருத்தை வரவேற்கிறேன். திமுகவும், அதிமுகவும் அண்ணன் தம்பி இயக்கம்தான் (DMK and AIADMK are brothers and sisters movement). ஆனால் மாறுபட்ட பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் பாதை எம்ஜிஆர் காட்டிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதிமுக இடத்தை பாஜக பிடிக்க பார்க்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

அதிமுகவின் ஒற்றுமையை பாஜக குலைக்கவில்லை. அதிமுகவை யாராலும் மிரட்ட முடியாது. தொண்டர்களை யாராலும் பிளவுபடுத்தி பார்க்க‌ முடியாது. அது நடக்காது. நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். எங்களை பொறுத்தவரை ஜனநாயக ரீதியில் இயக்கம் செயல்பட வேண்டும். வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் அதைதான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எந்த நோக்கத்திற்காக அதிமுக சட்டவிதியை எம்ஜிஆர் உருவாக்கினாரோ அதில் எந்த மாசும் ஏற்பட்டு விடக்கூடாது (AIADMK constitution should not be contaminated by MGR) என்பதற்காக தற்போது தர்மயுத்தம் நடைபெறுகிறது என்றார்.