Minister Thangam Thennarasu : எடப்பாடி பழனிசாமி பொய்களின் மொத்த தொகுப்பை ஆளுநரிடம் வழங்கியுள்ளார்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி பொய்களின் மொத்த தொகுப்பை ஆளுநரிடம் வழங்கியுள்ளார் Edappadi Palaniswamy has presented a whole set of lies to the Governor : Minister Thangam Thennarasu : என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துப் பேசியதுடன், திமுக அரசின் மீது புகார் மனுவை (Complaint petition against DMK Govt) ஆளுநரிடம் வழங்கியுள்ளார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்படாததால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளது (The safety of the people of Tamil Nadu is in question due to the lack of proper maintenance of law and order under the DMK regime) என்றும், கோவை சிலிண்டர் வெடிப்பு உளவுத் துறையின் தோல்வி மட்டுமின்றி காவல்துறையின் அலட்சியத்தையும் காட்டுகிறது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதன்கிழமை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியது: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி அளித்த புகார்கள் அனைத்தும் ஆதாரம் இல்லாதது (All complaints made by Edappadi Palaniswamy to the Governor are baseless). பொய்களின் மொத்த தொகுப்பை அவர் ஆளுநரிடம் வங்கி உள்ளார்.

அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பூசலில் பாஜகவின் ஆதரவு பெற அக்கட்சி தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்தித்துள்ளார் (Edappadi Palaniswami met the party leaders to seek BJP’s support in the internal conflict in AIADMK). பாஜகவில் நடக்கும் உட்கட்சி பிரச்னையை திசை திருப்ப ஒரு கருவியாக மாறி எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்திருக்கிறார் என்றார் அவர்.