Indian Air Force Day: இந்திய விமானப்படை தினம்: முக்கியத்துவம் மற்றும் வரலாறு

இந்திய விமானப்படை பல சமயங்களில் இயற்கை பேரிடர்களில் தங்கள் உயிரை பணயம் வைத்து பலரை பாதுகாப்பாக மீட்டுள்ளது. இந்த பிரமாண்டமான 90 வது இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

(Indian Air Force Day) இந்திய விமானப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய வான்வெளியை பாதுகாப்பாக வைத்திருப்பது மட்டுமின்றி, இந்திய விமானப்படை பல சமயங்களில் இயற்கை பேரிடர்களில் தங்கள் உயிரை பணயம் வைத்து பலரை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த பிரமாண்டமான 90 வது இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

அதன் வரலாற்றைப் பார்த்தால், இந்திய விமானப்படை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் (Indian Air Force Day) தொடங்கியது. இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 இல் நிறுவப்பட்டது, இந்தியா முதலில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தது. ஜப்பானிய படையெடுப்பை தடுக்கும் முயற்சியில் இந்திய விமானப்படை பயன்படுத்தப்பட்டது. 1947 இல் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய விமானப்படை ராயல் இந்தியன் ஏர்ஃபோர்ஸ் என மறுபெயரிடப்பட்டது.

1950 முதல், இந்திய விமானப்படை (Indian Air Force) பாகிஸ்தானுடன் நான்கு போர்களில் ஈடுபட்டுள்ளது. காங்கோ நெருக்கடி, கோவாவின் இணைப்பு, இரண்டாம் காஷ்மீர் போர், வங்கதேச விடுதலைப் போர், பாலகோட் விமானத் தாக்குதல் என பல சந்தர்ப்பங்களில் இந்திய விமானப்படை தனது பங்கை ஆற்றியுள்ளது.

சமீபகாலமாக நமது இந்திய விமானப்படை (Indian Air Force) மிகவும் வலுவாக உள்ளது. முன்னதாக இந்திய விமானப்படை வெளிநாடுகளில் இருந்து ஜெட் விமானங்களை இறக்குமதி செய்து வந்தது. அண்மைக் காலங்களில் நமது சொந்த நாடுகளிலேயே உற்பத்தி செய்யக்கூடிய திறன் பெற்றுள்ளது. வரும் நாட்களில் நமது இந்திய விமானப்படை நம் நாட்டில் தயாரிக்கப்படும் ஜெட் விமானங்களை மற்ற நாடுகளுக்கு விற்பனை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.