Shabrimala Yatre : சபரிமலை பக்தர்களுக்காக கோட்டயம் ரயில் நிலையத்தில் ‘சபரிமலை யாத்திரை மையம்’ திறப்பு

Shabrimala Yatre : இரண்டு மாத கால யாத்திரை நவம்பர் மாத நடுப்பகுதியில் இருந்து தொடங்குகிறது. இக்காலத்தில் சபரிமலைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் புனித சபரிமலை கோவிலின் யாத்திரை சீசன் தொடங்கி உள்ளது (The pilgrimage season of Sabarimala temple has started). இரண்டு மாத கால யாத்திரை நவம்பர் மாத நடுப்பகுதியில் இருந்து தொடங்குகிறது. இக்காலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு (Shabrimala Yatre) சென்று கடவுளை தரிசனம் செய்கின்றனர். கேரளாவின் கோட்டயம் ரயில் நிலையத்தில் பக்தர்கள் வசதிக்காக புதிய யாத்ரா மையத்தை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி முரளீதரன் திறந்து வைத்தார். யாத்திரை நேரம் தொடங்கும் முன்பே புதிய சபரிமலை யாத்திரை மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதை இந்தியாவின் இளம் வெளியுறவு அமைச்சர் வி முரளீதரன் (External Affairs Minister V Muralitharan) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சபரிமலை யாத்திரை தொடங்குவதற்கு முன்னதாக, கோட்டயம் ரயில் நிலையத்தில் புதிதாக‌ சபரிமலை யாத்திரை மையம் திறக்கப்பட்டது, மத்திய அரசு சரியான நேரத்தில் பரிசை யாத்ரீகர்களுக்கு வழங்கி உள்ளது. இதனால் பல யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயணத்தை எளிதாக்கும்.

சபரிமலை யாத்திரை சீசன் நவம்பர் 16 புதன்கிழமை (இன்று) தொடங்குகியது. சபரிமலை கோவிலின் கருவறையை திறந்து முதல் நாளே அர்ச்சகர்கள் கோயிலுக்கு வந்து. மாலை 5 மணியளவில் கோயிலுக்குள் சென்றனர். வியாழக்கிழமை காலை 5 மணி முதல் பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் கோயிலுக்குச் செல்லத் தொடங்கலாம் என்று டெய்லி ஹன்ட் தெரிவித்துள்ளது. புனித சபரிமலை யாத்திரை சீசன் 2 நிலைகளில் கடைபிடிக்க‌ப்படுகிறது. முதல் கட்ட யாத்திரை டிசம்பர் 27ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட யாத்திரை டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 14ம் தேதி மகர விளக்குடன் இந்த யாத்திரை நிறைவடைகிறது (This Yatra of Makara Vilakku will be completed on 14th January).

மகர விளக்கு ( Makara Vilakku) என்றால் என்ன?

கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி (Makara Sankranti) அன்று கொண்டாடப்படும் பண்டிகை மகர விளக்கு என்று அழைக்கப்படுகிறது. மகரவிளக்கு என்பது பொன்னம்பலமேடு (மகரவிளக்கு தோன்றும் இடம்) காட்டில் மலையமான் காரியின் வழித்தோன்றல்கள் என்று நம்பப்படும் மலையராய பழங்குடியினரால் முற்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஒரு சமயச் சடங்குகளின் ஒரு பகுதியாகும். பொன்னம்பலமேடு என்ற இடத்தில் ஒரு கோவில் உள்ளது. அந்தப்பகுதியில் மகர சங்கராந்தியன்று ஒளி போன்று தோன்றுவதைதான் மகர விளக்கு எனக் கூறப்படுகிறது. அன்று சபரிமலையில் திரண்டு இருக்கும் பக்தர்கள் வணங்கி வழிபடுகின்றனர்.