புதுடெல்லி: Google Doodle celebrates 96th birth anniversary of Bhupen Hazarika. கூகுள் நிறுவனம் பூபன் ஹசாரிகாவின் 96வது பிறந்தநாளை கூகுள் டூடுல் மூலம் கொண்டாடி அஞ்சலி செலுத்துகிறது.
பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் பூபன் ஹசாரிகாவின் 96வது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் அவருக்கு கிரியேட்டிவ் டூடுல் மூலம் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தியது.
கூகிள் தனது முகப்பு பக்கத்தில் புகழ்பெற்ற பாடகர் பூபன் ஹசாரிகாவின் வண்ணமயமான மற்றும் விசித்திரமான விளக்கத்துடன் பூபேன் ஹசாரிகாவை கௌரவித்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை பூபன் ஹசாரிகா பெற்றார்.
பூபன் ஹசாரிகா பாடகரும், புகழ்பெற்ற கவிஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். கடந்த 1926ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி பிறந்த அவர், 2011 நவம்பர் 5ம் தேதி காலமானார்.
மேற்கு வங்காளம் மற்றும் பங்களாதேஷில் ஹசாரிகா மிகவும் பிரபலமாக இருந்தார். மேலும் அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புற இசையை ஹிந்தி சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்.
இரவிங்கேல் என்று பொருள்படும் சுதாகந்தா என்று பிரபலமாக அறியப்படும் அவர், தேசிய திரைப்பட விருது, பத்மஸ்ரீ, தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷன் மற்றும் பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவர் தனது பாரிடோன் குரலுக்காகவும், காதல் முதல் சமூக மற்றும் அரசியல் வர்ணனை வரையிலான கருப்பொருள்களில் இசையமைப்பதற்காகவும் அறியப்பட்டார். ‘பிஸ்டிர்னோ பரோர்,’ ‘மொய் எட்டி ஜஜாபோ,’ ‘கங்கா மோர் மா,’ மற்றும் ‘பிமுர்தோ முர் நிக்சதி ஜென்’ ஆகியவை, அஸ்ஸாமிய இசையில் அவரது புகழ்பெற்ற படைப்புகளில் சிலவற்றை இன்னும் பார்வையாளர்கள் ரசிக்கின்றனர்.
பூபன் ஹசாரிகாவின் பிறந்தநாளையொட்டி, மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், “பாரத ரத்னா டாக்டர் பூபன் ஹசாரிகா ஜியின் அற்புதமான குரலைக் கொண்ட அற்புதமான இசைக்கலைஞரின் ஜெயந்தியின்போது அவருக்கு தலைவணங்குகிறேன். அவரது பல்துறை மற்றும் மயக்கும் பாடல்களால், அவர் இந்திய இசை மற்றும் அசாமிய நாட்டுப்புற கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தினார். இசை மற்றும் கலை உலகில் அவரது பங்களிப்பு பாராட்டத்தக்கது.” என அவர் தெரிவித்துள்ளார்.



