Diwali Festival 2022 : கேளிக்கைக்காக அப்பார்ட்மென்ட் மீது ராக்கெட் வெடியை வீசிய மர்மநபர்: வீடியோ வைரல்

2022 தீபாவளி பண்டிகையின் போது (Diwali Festival 2022) , ​​மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மீது மர்ம நபர்கள் ராக்கெட் வெடியை வீசினர்.

மும்பை: தீபாவளி பண்டிகையின் போது (Diwali Festival 2022) மகாராஷ்டிராவின் தானேயில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தின் மீது மர்ம நபர் ராக்கெட் வெடியை வீசினார். தற்போது மர்மநபர்கள் செய்த குற்றம் சிசி கேமராவில் பதிவாகியுள்ளது, வீடியோ வைரலானவுடன், குற்றவாளிகளை போலீசார் தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர் (celebrating Diwali). தீபாவளியை பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள உலாஸ்நகர் பகுதியில் திங்கள்கிழமை இரவு நடந்துள்ளது. சம்பவத்தின் வீடியோவில், தாக்குதல் நடத்திய இளைஞர் குடியிருப்பு கட்டிடத்தை நோக்கி பல ராக்கெட்டுகளை வீசினர். அவர்கள் வீசிய ராக்கெட்டுகள் மக்கள் இருந்த பால்கனிகளை தாக்குவது வீடியோவில் சிக்கியது. மகாராஷ்டிர மாநிலம் தானேயில் உள்ள உலாஸ்நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் குழந்தைகள் உட்பட பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ்நகரில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ராக்கெட் தாக்குதலால் காயமடைந்த நபர் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே நின்று கொண்டிருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது (It has been recorded in the video). மற்ற பட்டாசுகளை வெடித்த பிறகு இளைஞர் ராக்கெட்டை பற்ற வைத்தார். அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல் மற்றும் பால்கனியில் இருந்து ராக்கெட் வீடுகளுக்குள் நுழைந்தது. இச்சம்பவத்தால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இதுவரை தெரியவில்லை. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், அந்த அடையாளம் தெரியாத இளைஞர் மீது தானே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த நபர் மீது ஐபிசி பிரிவு 285 (Section 285 of IPC on that person) (தீ அல்லது எரியக்கூடிய விஷயங்களில் அலட்சியமாக நடந்துகொள்வது), 286 (வெடிக்கும் பொருள் தொடர்பாக அலட்சியமாக நடந்துகொள்வது) மற்றும் 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

இதற்கிடையில், தானேயில் திங்கள்கிழமை பட்டாசு வெடித்ததில் 11 தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. தானே தீயணைப்புப் படைக்கு நேற்று மொத்தம் 16 அழைப்புகள் வந்ததாகவும், அதில் 11 அழைப்புகள் பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தீ பற்றியது என்றும் மாவட்ட மாநகராட்சி (District Corporation) அதிகாரிகள் தெரிவித்தனர்.