DefExpo 2022 preparations: புதுடெல்லியில் பாதுகாப்பு கண்காட்சி ஆய்வுக்கூட்டம்

புதுடெல்லி: Rajnath Singh reviews DefExpo 2022 preparations in New Delhi. புதுடெல்லியில் பாதுகாப்பு கண்காட்சி 2022-க்கான ஏற்பாடுகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு செய்தார்.

புதுடெல்லியில் பாதுகாப்பு கண்காட்சி 2022-க்கான ஏற்பாடுகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் கண்காட்சிக்கு பல்வேறு துறையினரால் மேற்கொள்ளப்படும் விரிவான ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அமைச்சரிடம் அதிகாரிகள் விவரித்தனர். பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயரதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

குஜராத்தின் காந்தி நகரில் அக்டோபர் 18 முதல், 22 வரை 12-வது பாதுகாப்பு கண்காட்சி நடைபெறவுள்ளது. செப்டம்பர் 27 வரை இந்த கண்காட்சியில் பங்கேற்க 1136 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 76,000 சதுர மீட்டரில் நடத்தப்பட்ட கண்காட்சியை தற்போது 1 லட்சம் சதுர மீட்டரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாதையில் இருந்து பெருமிதத்திற்கு என்பது இந்த கண்காட்சியின் மையப் பொருளாக இருக்கும்.

இந்த கண்காட்சி முதல் முறையாக இந்திய நிறுவனங்களுக்காக மட்டுமே நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்திய நிறுவனம் ஒன்றுடன் கூட்டு முயற்சியில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய நிறுவனங்களாக கருதப்படும். ஏற்கனவே இருந்த ராணுவ தளவாட தொழில் வாரியத்தால் உருவாக்கப்பட்ட 7 புதிய பாதுகாப்பு நிறுவனங்களும் இந்த ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்கும்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் அக்டோபர் 18,19,20 ஆகிய மூன்று நாட்கள் வணிகம் சார்ந்ததாக இருக்கும். அக்டோபர் 21,22 பொது மக்கள் பார்வையிடுவதற்கானவை. முதல் முறையாக இந்நிகழ்வு 4 இடங்களில் நடைபெறவுள்ளது. மகாத்மா மந்திர் மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் தொடக்க விழாவும், கருத்தரங்குகளும் நடைபெறும். ஹெலிபேடு கண்காட்சி மையத்தில் கண்காட்சியும் நடைபெறும்.

பாதுகாப்பு தொழில்துறை உற்பத்தியில் சிறந்து விளங்குவோருக்கான பாதுகாப்பு அமைச்சர் விருதுகளும் இந்த கண்காட்சியின் போது முதன் முறையாக வழங்கப்படவுள்ளன.

இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் துறைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அறிவுறுத்தல்

புது தில்லியில் இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 5ம் ஆண்டு கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று உரையாற்றினார். ‘புதிய இந்தியா’ என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, அதிநவீன செலவு குறைந்த பொருட்களைக் கண்டறிந்து தயாரிக்க இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி தொழில் துறைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். இது உள்நாட்டு தேவையை மட்டுமின்றி, சர்வதேச நாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்யும் என்று தெரிவித்தார்.

பாதுகாப்பான, வலிமையான நாடால் மட்டுமே, வெற்றியின் உயரத்தை அடையமுடியும் என்று அவர் கூறினார். உலகில் வலிமையான நாடுகளில் ஒன்றாக இந்தியாவை திகழ செய்யும் வகையில், தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை உறுதி செய்ய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கான உகந்த சூழலை உருவாக்க தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.