An animal-friendly Diwali : விலங்குகளை பாதிக்காத தீபாவளியைக் கொண்டாட வேண்டுகோள்

விலங்குகளின் பார்வையில் மட்டுமல்ல, சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறு அவர்கள் மக்களை வலியுறுத்துகின்றனர்

பெங்களூரு: An animal-friendly Diwali : விலங்குகளை பாதிக்காத தீபாவளியைக் கொண்டாட விலங்கு ஆர்வலர்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

மக்கள் அனைவரும் தீபாவளியைக் கொண்டாட உற்சாகமாக இருக்கும் நிலையில், நிகழாண்டு ஆண்டு பாதுகாப்பான, அன்பான பண்டிகையைக் கொண்டாட விலங்கு ஆர்வலர்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன (Animal activists and nonprofits have called). பட்டாசுகளின் சத்தம் பொதுவாக விலங்குகளை திடுக்கிடச் செய்வதால், சிலவற்றிற்கு காயங்கள் கூட ஏற்படுகின்றன, விலங்கு ஆர்வலர்கள் செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கும் தெரு விலங்குகளைப் பராமரிப்பவர்களுக்கும் பல குறிப்புகளை வழங்குகிறார்கள்.

தொடக்கத்தில், விலங்குகளின் பார்வையில் மட்டுமல்ல, சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறு அவர்கள் மக்களை வலியுறுத்துகின்றனர். பட்டாசுகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் (Firecrackers are harmful to the environment). செல்லப்பிராணிகள், தெரு நாய்கள் மற்றும் பறவைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன என்று குபாவின் (CUPA) இரண்டாவது வாய்ப்பு சரணாலயம் இந்தியாவின் அறங்காவலர் சஞ்சனா மடப்பா தெரிவித்தார்.

தீபாவளியின் போது மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை பாதுகாப்பாக வைத்திருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகளையும் (Precautions to be taken to keep pets safe)அவர் குறிப்பிட்டுள்ளார்.செல்லப்பிராணிகள் சத்தத்திற்கு மிகவும் பயப்படுவதால், சத்தம் இல்லாத நகரத்திற்கு வெளியே அழைத்துச் செல்வதே சிறந்தது. மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு கொண்டாட்டங்களுக்கு செல்லக்கூடாது. ஏனென்றால் நாள் முடிவில், நம் செல்லப்பிராணிகள் ஆறுதலுக்காகவும் பாதுகாப்பிற்காகவும் நம்மிடம் வருகின்றன. வீட்டில் செல்லப்பிராணிகள் தனியாக இருந்தால், அவை அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் சத்தமாக இசையை இசைக்கலாம் அல்லது சத்தம் செல்லப்பிராணிகளின் காதுகளுக்கு எட்டாமல் இருக்க தொலைக்காட்சிகளில்,ரேடியோக்கலில் ஒலியை அதிகரிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிஜே மெமோரியல் அறக்கட்டளையின் நிறுவனர் பிரியா செட்டி ராஜகோபால், பாதுகாப்பான மற்றும் அன்பான பண்டிகையைக் கொண்டாட மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறார். பட்டாசு சத்தம் இல்லாதபோது விலங்குகளுக்கு உணவளிப்பது, மக்கள் பட்டாசு வெடிக்காதபோது நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது, தெரு நாய்கள் காயம் அடைந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட கால்நடைகளுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த பட்டியலை அவர் வெளியிட்டுள்ளார் (She has published a list of dos and don’ts for livestock).

விலங்குகள் சமூகத்தில் மிகவும் ஆதரவற்றவை, அவற்றிற்கு சொந்த குரல் இல்லாததால், நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு பட்டாசுகளை வெடிப்பது சட்டப்பூர்வமானது அல்ல என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாதது மிகவும் வருத்தமளிக்கிறது. ஒவ்வொரு தீபாவளியின் போதும் விலங்குகள் மன அழுத்தம் இல்லாமல் பாதுகாப்பாக இருக்க உதவுவோம் என்றுபிரியா செட்டி ராஜகோபால் பதிவிட்டுள்ளார். எனவே சத்தம் அதிகமில்லாத, பாதுகாப்பான, யாரையும் தொல்லை படுத்தாத பசுமை பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாட உறுதி பூணுவோம் (Let’s commit to celebrating Diwali by bursting green crackers).