Bharat Jodo Yatra : இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொட‌ங்கியது பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல் காந்திக்கு சோனியா ஆதரவு

Rahul Gandhi : பாரத் ஜோடோ யாத்திரையில் காலடி எடுத்து வைத்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பூர்ணகும்ப வரவேற்பு

மண்டியா: Bharat Jodo Yatra resumes after two-day break, Sonia backs Rahul Gandhi மாநில சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு, பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் அவரது அன்னை சோனியா காந்தியும் இறங்கியுள்ளார். இரண்டு நாட்களாக ஓய்வில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் இன்று மண்டியாவில் மீண்டும் பாதயாத்திரையை தொடங்கினர். ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் பாதயாத்திரையில் பங்கேற்கிறார். பாண்டவபுரா தாலுகாவில் ராமனஹள்ளி அருகே பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா காந்தி கலந்து கொண்டார்.

பாரத் ஜோடோ யாத்திரையில் காலடி எடுத்து வைத்த சோனியா காந்தி (Sonia Gandhi) மற்றும் ராகுல் காந்திக்கு பூர்ணகும்ப வரவேற்பு கேட்ட காட்சி இருந்தது. நாகமங்கலா தாலுகாவில் உள்ள கரடியா சாலை ஓரத்தில் நின்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு பூர்ணகும்ப வரவேற்பு அளித்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா காந்தி 12 நிமிடங்கள் நடந்தார். சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூரம் (A distance of three quarters of a kilometer) ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் பாதயாத்திரையில் பங்கேற்றார். இந்நிலையில், தன்னுடன் நடந்து சென்ற சோனியா காந்தியை முக்கால் கிலோ மீட்டர் தூரத்திற்கு பிறகு, ராகுல் காந்தி தடுத்து நிறுத்தி, நடைபயணத்தில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்து, இனி நடைபயணத்தில் பங்கேற்க வேண்டாம் என கூறி, அவரை திருப்பி அனுப்பினார். சோனியா காந்தி இன்று டெல்லி திரும்புகிறார்.

பாரத் ஜோடோ யாத்திரையின் போது, ​​அமிர்தி கிராமம் அருகே (Near Amriti Village) சக்கர நாற்காலியில் நடுரோட்டில் ரோஜா பூக்களை கொடுக்க மாற்றுத்திறனாளி ஒருவர் காத்திருந்தார். இதனைப்பார்த்த ராகுல் காந்தி அவரை அருகில் அழைத்து வர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கட்சி தொண்டர்களிடம் தெரிவித்தார். அவருடன் சுமார் 2 நிமிடம் பேசிக் கொண்டே ராகுல்காந்தி தனது நடைபயணம் மேற்கொண்டார்.

இன்றைய பாத யாத்திரையில் நிகழ்ச்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் (More than 15 thousand people participated in the program). காலை முதலே பாரத் ஜோடோ யாத்திரையில் மக்கள் குவியத் தொடங்கினர். வழி நெடுகிலும் மக்கள் பாதயாத்திரையில் கலந்து கொண்டு வருகின்றனர்.இன்று பாரத் ஜோடோ யாத்திரையில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற‌னர்.