2 Satellites launched today are failed : இன்று விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் செயலிழந்தன: இஸ்ரோ அறிவிப்பு

ஆந்திரா: 2 Satellites launched today are failed: ISRO announce :இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் 2 செயலிழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து புவி கண்காணிப்பிற்காக ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களும் செயல் இழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்தது (2 Satellites launched today are failed: ISRO announce). மேலும் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிறுத்துவதற்கு முடியவில்லை என தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இஓஎஸ்-02, ஆஸாதிசாட் ஆகிய செயற்கைகோள்கள் இன்று காலை 9.18 மணிக்கு ஏவ‌ப்பட்டன. 144 கிலோ எடை கொண்ட இஓஎஸ்-02 செயற்கைக்கோள் புவி காண்காணிப்பிற்காகவும், 8 கிலோ எடை கொண்ட ஆஸாதிசாட் செயற்கைக்கோள் சோலார் பேனல்களை படம் பிடிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. எஸ்எஸ்எல்வி ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்ட இந்த 2 செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்துவதற்கு முடியவில்லை என்பதால், இனி அந்த செயற்கை கோள்களை பயன்படுத்த முடியாமல் போயியுள்ளது. எஸ்எஸ்எல்வி ராக்கெட்டிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே செயற்கை கோள்கள் வெளியேறியதால் சுற்று வட்டப்பாதையில் நிறுத்த முடியாமல் போனதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஏவப்பட்ட செய்ற்கை கோள்கள் செயலிழந்ததால் (2 Satellites launched today are failed: ISRO announce) இஸ்ரோ விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர்.

முன்னதாக இதுகுறித்து ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்(Shri Harikota) உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குந‌ர் ராஜராஜன் கூறியது: உலகளாவிய சிறிய செயற்கைகோள்கள் ஏவுவதற்காக எஸ்எஸ்எல்வி ராக்கெட் தயாரிக்க முயற்சித்துக்கொண்டிருக்கும் போது, அது ஏன் செய்யப்படுகிறது? என்று எல்லோரும் கணக்கெடுப்பு செய்தார்கள். மினி, மைக்ரோ மற்றும் நானோ செயற்கைகோள்களின் வரிசையில் ஏவுதல் சேவைகளுக்கான வளர்ந்து வரும் சந்தை உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 500 செயற்கைகோள்கள் இந்தியாவில் இருந்து ஏவப்படும்.

கடந்த‌ பத்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஏவப்படும் செயற்கைகோள்களின் சராசரி எண்ணிக்கையில் ஏறக்குறைய 3 இல் 2 மடங்கு அதிகமாகும். இந்த தேவையில் 80 சதவீதம் கமிஷன் சந்தையால் இயக்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.வி. ரகத்தின் முதல் ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் (Satish Dhawan Space Research Centre) ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. எஸ்எஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி. ராக்கெட்டுகளை போல இதற்கு 25 மணி நேரம் தேவைப்படாது என்று தெரிவித்தார்.

சர்வதேச விண்வெளித் துறையில் சிறிய செயற்கைக் கோள்களை ஏவுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு 500 கிலோ வரையிலான எடை குறைந்த செயற்கைகோள்களை புவியின் தாழ்வட்ட பாதைக்கு கொண்டு செல்ல சிறிய ரக எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ (Isro) புதிதாக வடிவமைத்திருந்தது. அதே போல சிறிய வகையிலான ராக்கெட் இஓஎஸ்- 2 ஞாயிற்றுக்கிழமை காலை 9.18 மணிக்கு ஏவப்பட்டது. ஏவப்பட்ட‌ இந்த ராக்கெட் 145 கிலோ எடை கொண்டது. இதனுடன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் மூலம் 8 கிலோ எடை கொண்ட ஆசாதி சாட் எனும் கல்விசார் செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோளை நாடு முழுவதிலும் உள்ள 75 பள்ளிகளைச் சேர்ந்த‌ மாணவர்கள் உருவாக்கி இருந்தனர்.

இந்த செயற்கைகோள் கடலோர நிலப்பரப்பின் பயன்பாடு, ஒழுங்குமுறை, நகர்ப்புற, கிராமங்களின் மேலாண்மை, பயன்பாடற்ற நிலங்களுக்கான எல்லை வரைபடம் (Boundary map) தயாரிப்புகள் உள்ளிட்ட பணிகளுக்கு உதவியாக இருந்திருக்கும். இதில் உள்ள கேமராக்கள் மூலம் 6 மீட்டர் அளவிற்கு துல்லியமாக புகைப்படம் எடுக்கக் கூடிய வசதிகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.