SSC Translator Exam on 1st: வரும் 1ம் தேதி மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மொழிப்பெயர்ப்பாளர் தேர்வு

சென்னை: Staff Selection CommissionTranslator Exam on 1st: மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் பல்வேறு மொழிப்பெயர்ப்பாளர்களுக்கான தேர்வு வரும் 1ம் தேதி நடைபெறுகிறது.

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல இயக்குனர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் தென் மண்டல பணியாளர் தேர்வாணையம் ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர், ஜூனியர் மொழிப்பெயர்ப்பாளர், சீனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர், 2022 (தாள்-1) தேர்வை நடத்த உள்ளது. தென் மண்டலத்தில் 351 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், ஆந்திர பிரதேசத்தில் கர்னூல், விஜயவாடா, விசாகப்பட்டினத்திலும், தெலங்கானாவில் ஹைதராபாத் ஆகிய ஏழு நகரங்களில் ஏழு மையங்களில் நடைபெற உள்ளது.

தென் மண்டலத்தில் இத்தேர்வு 1.10.2022 அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு ஷிப்டாக நடைபெற உள்ளது.

தேர்வு நடைபெறும் தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக இருந்தும், அதன் பிறகு அவர்களது தேர்வு நாள் வரை மட்டும் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள தக்க வகையில், எங்களது வலைதளத்தில் இருந்து மின்னணு – தேர்வு அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன் லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்பட்டுள்ளது.

கைகடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்களை (செல்போன், புளுடூத், ஹெட்போன், பேனா/ பட்டன் ஹோல்/ ஸ்பை கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர் ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை) தேர்வு அறைக்குள் கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது. அதுபோன்ற பொருட்கள் எதையும் தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் வைத்திருப்பதை கண்டறியப்பட்டால், அவன்/அவளது விண்ணப்பங்கள் ரத்து செய்ய நேரிடுவதுடன், சட்ட/ குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் அடுத்த 3 -7 ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும். எனவே, தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பைகள் எதையும் தேர்வு மையத்திற்கு எடுத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மின்னணு தேர்வு கூட அனுமதி சீட்டு மற்றும் அசல் அடையாள ஆவணமின்றி, விண்ணப்பதாரர்கள் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது மின்னணு தேர்வு கூட அனுமதி சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள்/ சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண்கள் (லேண்ட்லைன்- 044 2851139 & செல்போன்: 94451 95946) உதவி எண்கள் வாயிலாக தொடர்புகொள்ளலாம்.

கொவிட்-19ஐ கருத்தில் கொண்டு தேர்வாணையம், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், விண்ணப்பதாரர்களும் தேர்வுக் கூட மின்னணு அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ளபடி தவறாமல் அறிவுரைகளை பின்பற்றி தேர்வை பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோல், மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு, 2022-க்கான அறிவிக்கையை 17.09.2022 அன்று பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சட்ட ரீதியிலான, சட்டபூர்வ ரீதியிலான அமைப்புகள், தீர்ப்பாயங்களில் குரூப்-பி மற்றும் குரூப் –சி காலிபணியிடங்களை நிரப்புவதற்காக வெளிப்படையான வகையில் போட்டித் தேர்வை ஆணையம் நடத்தவுள்ளது.

பணி விவரங்கள், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, தேர்வுகட்டணம், தேர்வுமுறை, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்டவை தொடர்பான விவரங்கள், பணியாளர் தேர்வு அறிவிக்கையில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளமான https://ssc.nic.in/ என்ற முகவரில் ஆன்லைன் மூலம் மட்டுமே அளிக்கவேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 08.10.2022 (இரவு 11 மணி) இணையதளம் மூலம் தேர்வு கட்டணத்தை செலுத்த கடைசி நாள் 09.10.2022 (இரவு 11 மணி)

கணினி அடிப்படையிலான இத்தேர்வு தென் மண்டலத்தில் தமிழ்நாட்டில் எட்டு மையங்களிலும், புதுச்சேரியில் ஒரு மையத்திலும் ஆந்திரபிரதேசத்தில் 10 மையங்களிலும், தெலங்கானாவில் மூன்று மையங்களிலும் என மொத்தம் 22 மையங்களில் டிசம்பர் 2022 ல் நடைபெறும்.

இவ்வாறு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தென் மண்டல இயக்குனர் கே.நாகராஜா தெரிவித்துள்ளார்.