Truck crushes car in Bengaluru: பெங்களூருவில் லாரி-கார் மோதல்; தாய், மகள் உயிரிழப்பு

பெங்களூரு: Two people died after a speeding lorry collided with a car in Bengaluru. பெங்களூருவில் அதிவேகமாக வந்த லாரி கார் மீது மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

பெங்களூரு பன்னர்கட்டா மெயின் ரோட்டில் சிமென்ட் ஏற்றப்பட்ட கான்கிரீட் மிக்சர் லாரி கவிழ்ந்து கார் மீது நசுங்கியதில் தாயும் மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காவல்துறையினர் தெரிவிக்கையில், காயத்ரி குமார், 47, தனது 16 வயது மகள் சமதா குமாரை பள்ளிக்கு காரில் அழைத்துச் சென்றபோது, பன்னர்கட்டா சாலையில் வேகமாக வந்த லாரி கவிழ்ந்து அவர்களின் காரை நசுக்கியது. அவ்வழியாக சென்றவர்கள் வாகனத்தின் அடியில் சிக்கிய பெண்ணையும் அவரது மகளையும் வெளியே எடுக்க முடியாமல் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மொத்தம் நான்கு கிரேன்கள் மூலம் உடல்களை மீட்டனர்.

இறந்த பெண், தகவல் தொழில்நுட்ப வல்லுநர் தனது கணவர் சுனில் குமார் மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளுடன் பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த தம்பதி பெல்லாரியை சேர்ந்தவர்கள். மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றன.