3 minors kill : பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று அறிவுரை கூறியவரை மூன்று சிறார்கள் கொடூரமாக கொன்றனர்: சிசி கேமராவில் பதிவான பயங்கர காட்சி

bursting firecracker : கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சுனில், மைனர் குற்றவாளியின் பின்னால் ஓடினார். இந்த காட்சி அங்கிருந்த சிசி கேமராவில் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா: 3 minors kill : தீபாவளி கொண்டாட்டங்களுக்கு நடுவே, மும்பை சிவாஜி நகர் நட்வர் பரேக் வளாகத்தில் காட்டுமிராண்டித்தனமான சம்பவம் நடந்துள்ளது. கண்ணாடி பாட்டிலில் பட்டாசு வெடிப்பதை தடுத்த 21 வயது இளைஞரை மூன்று சிறார்கள் கொன்ற சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். ஒருவ‌ர் காணாமல் போயுள்ளார், அவரை கண்டுபிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர். சிசி கேமராவில் பதிவான காட்சிகளின்படி, சுனில் சங்கர் நாயுடு கத்தியால் குத்தப்பட்ட நிலையில் குற்றவாளியின் பின்னால் ஓடுவதைக் காணலாம்.

சிவாஜி நகர் போலீசார் (Shivaji Nagar Police) மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் அளித்த தகவலின்படி, சுனில் சங்கர் நாயுடு 12 வயது சிறுவனை கண்ணாடி பாட்டிலுக்குள் பட்டாசு வெடிக்க விடாமல் தடுத்துள்ளார். இதையடுத்து, சுனில் சங்கர் நாயுடு மீது கோபமடைந்த 12 வயது சிறுவன், தனது 14 வயது சகோதரனையும், 15 வயது நண்பரையும் அழைத்து வந்துள்ளார். முதலில் நால்வருக்கும் எதிராக வாக்குவாதம் ஏற்பட்டது. மூன்று சிறார்கள் சுனிலை அடித்தனர். இதற்கிடையில் சிறார்களில் ஒருவர் 21 வயது இளைஞரின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்.

கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட பிறகு, சுனில் மைனர் குற்றவாளியின் பின்னால் ஓடினார். இந்த காட்சி அங்கிருந்த சிசி கேமராவில் பதிவாகியுள்ளது (Recorded on CC camera) . கழுத்தில் கத்தியுடன் படிக்கட்டில் ஏறிய அவர், தொடர்ந்து ஓட முடியாமல் அங்கேயே சரிந்து விழுந்தார். சுனில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதிக ரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மூன்று சிறார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.