தெலுங்கானாவில் கட்டிடம் இடிந்து விழுந்து 4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு
4 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு

Building Collapses In Telangana: தெலுங்கானாவின் யாதாத்ரி- போங்கிர் மாவட்டத்தில் நேற்று பழமையான கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில், கட்டிடத்தின் கூரையின் கீழ் நின்றுக் கொண்டிருந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், உள்ளூர்வாசிகளின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் கட்டிடத்தின் உரிமையாளர், வாடகைக்கு குடியிருந்தவர் மற்றும் இரண்டு தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கோவில் நகரமான யாதாத்ரியில் நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தோர் குறித்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருத்தமடைந்ததாக தெரிவித்தார்.

மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவச் சேவையை வழங்குமாறும் மாவட்ட அதிகாரிகளுக்கு ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.

4 Crushed To Death After Part Of Old Building Collapses In Telangana

இதையும் படிங்க: தேர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு