Man Shoots Girl friend : தன்னை காதலித்து, பிரிந்த பெண்ணை, சுட்டுக் கொன்ற இளைஞர்

Accused Arrested : குற்றம் சாட்டப்பட்டவர் மளிகைக் கடையில் வேலை செய்து வந்தார். அவரை திருமண செய்து கொள்வதில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.குற்றத்திற்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கியை கால்வாயில் வீசியதாக போலீஸ் அதிகாரி குப்தா தெரிவித்தார்.

டெல்லி: Man Shoots Girl friend :  காதலித்த பெண்ணை பிரிந்ததால் அவரை சுட்டுக் கொன்ற நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படுவதற்கு முன்னர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பல ஹோட்டல்களில் குற்றவாளி பதுங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் ரோஹோத் குப்தா என்ற சோனு (29), சல்மாவுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி பாரதிநகர் பகுதியில் (Bharatinagar area) பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒரு பெண்ணின் சடலத்தைக் கண்டெடுத்தனர். அவள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள், ஆனால் அவள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். உயிரிழந்த பெண் 45 வயதான சல்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குற்றம் நடந்த இடத்தில் இருந்து மூன்று வெற்று தோட்டாக்களை மீட்ட பிறகு, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் (Under relevant sections of Indian Penal Code and Arms Act) போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் இறந்த பெண்ணுடன் உறவில் இருந்ததாகவும், அந்த பெண் பிரிந்ததையடுத்து, விரக்தியடைந்த நபர் கொலை செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. குற்றத்தை செய்த பிறகு, அவர் வெவ்வேறு ஹோட்டல்களில் பதுங்கியிருந்தார். போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க அடிக்கடி இடம் மாறி வந்ததாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் மளிகைக் கடையில் வேலை செய்து வந்தார். மேலும் அவரை திருமண செய்து கொள்வதில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. குற்றத்திற்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கியை கால்வாயில் வீசியதாக போலீஸ் அதிகாரி குப்தா தெரிவித்தார் (Police officer Gupta said).