Crime: தலைமைச் செயலகம் அருகே ஒருவர் தீக்குளிப்பு

Crime
தமிழக மந்திரிசபை மாற்றம் ஒத்திவைப்பு

Crime: திருவள்ளூர் மாவட்டம் திருவலங்காடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பொன்னுசாமி. இவர் சுப்பிரமணி என்பவரிடம் கடன் கொடுத்துள்ளார். ஆனால் கடன் வாங்கிய சுப்பிரமணி பணத்தை திருப்பித் தரவில்லை.

இதனால் மனமுடைந்த பொன்னுசாமி பணத்தை திருப்பி வாங்கி தர வேண்டும் என வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் பொன்னுசாமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: Mango Payasam: எளிய முறையில் செய்யலாம் மாம்பழ பாயாசம்