Accident: சேலம் அருகே பைக் மீது லாரி மோதல் – தந்தை, மகன் உயிரிழப்பு

சேலம் அருகே பைக் மீது லாரி மோதல் - தந்தை, மகன் உயிரிழப்பு

Accident: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூரை சேர்ந்தவர் சதாம் உசேன்(74). இவர் தனது மகன் அப்துல் பாசித்(4) உடன் நேற்று கிருஷ்ணாபுரத்துக்கு சென்றுவிட்டு பின்னர் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். கடம்பூர் பொங்காளி அம்மன் கோவில் அருகே சென்றபோது சதாம் உசேன் வாகனத்தின் மீது எதிரே ஜல்லி ஏற்றிவந்த டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் சிறுவன் அப்துல் பாசித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

பலத்த காயமடைந்த சதாம் உசேனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆத்துர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த கெங்கவல்லி போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தாயாரின் 100வது பிறந்தநாள்: நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பிரதமர் மோடி