Crime: 5 மாத பெண் குழந்தையை ரூ. 1.40 லட்சத்துக்கு விற்ற தாய்

திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு
திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு

Crime: நெல்லை மாவட்டத்தில் மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தையை சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுற்று உவரி பகுதியில் உள்ள அண்ணாநகரைச் சேர்ந்தவர் தங்கச் செல்வி. 42 வயதான இவருக்கு, திருமணமாகி 19 வயதிலும், 4 வயதிலும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே கணவரை பிரிந்து, தனியே வசித்து வந்தார் தங்கச் செல்வி. இந்நிலையில் தங்கச் செல்வி அதே ஊரைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ராஜ லட்சிகா என பெயரிட்டதாக தெரிகிறது. குடும்ப வறுமை காரணமாகவும் ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் வருத்தத்தில் இருந்த அவர், மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தையை 5 மாதத்தில் விற்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு கூட்டப்பனை பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் மாரியப்பன் உதவுவதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Mahinda Rajapakse: பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் மகிந்தா ராஜபக்சே