பெல்காம்: murdering Chandrasekhar Guruji : சரள வாஸ்து ஜோதிடர் சந்திரசேகர் குருஜியை கொலை செய்த மஞ்சுநாத் தும்மவாடா மற்றும் மஹந்தேஷ் ஷிரோல் ஆகியோரை கைது செய்வதில் போலீஸார் வெற்றி பெற்றுள்ளனர். ஹூப்பள்ளி மற்றும் ராமதுர்கா போலீஸார் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் கொலை குற்றத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்தனர். குற்றவாளிகள் சென்ற காரை பெல்காம் சாலையில் துரத்திச் சென்ற போலீஸார், காரை மறித்து, கைத்துப்பாக்கி முனையில் எச்சரித்து, அவர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றினர்.
சந்திரசேகர் குருஜியைக் கொன்றுவிட்டு ஹோட்டலில் இருந்து தப்பிய மஞ்சுநாத் தும்மவாடா மற்றும் மஹந்தேஷ் ஷிரோல் ஆகியோர் உடைகளை மாற்றிக் கொண்டு காரில் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் இவர்கள் செய்த செயல் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகி இருப்பது மட்டுமின்றி ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் பரவியது. இதனிடையே தாங்கள் தப்பிக்க முயன்றால் என்கவுன்ட்டர் நடக்க வாய்ப்புள்ளது என எண்ணி இருவரும், போலீஸாரை போனில் அழைத்து பெல்காம் நோக்கி செல்வதாக தெரிவித்ததாகத் தெரிகிறது.
ஹூப்பள்ளி மற்றும் ராமதுர்கா காவல் நிலைய போலீஸார் குற்றவாளிகளின் காரை துரத்திச் சென்று கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளைக் கைது செய்வதில் வெற்றி பெற்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கு முன்பு, செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார், அதேபோல் குற்றவாளிகளைக் கைது செய்வதில் போலீஸார் வெற்றி பெற்றுள்ளனர்.
கைத்துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பிறகுதான் சந்திரசேகர் குருஜி கொலைக்கான காரணம் தெரியவரும்.