Robbery at the house of actor R.K : நடிகர் ஆர்.கேவின் மனைவியைக் கட்டிப் போட்டு நகை, ரொக்கப்பணம் கொள்ளை

சென்னை : Actor RK’s wife was tied up and robbed of jewellery, cash :சென்னை அருகே நந்தம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த நடிகர் ஆர்.கே மனைவியை கட்டிப்போட்டு 200 சவரன் நகை, ரொக்கப்பணத்தை கொள்ளையடித்த வழக்கில், போலீஸார் 10 தனிப்படைகள் அமைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்ற‌னர்.

சென்னை நந்தம்பாக்கம், டிஃபன்ஸ் காலனி (Nandambakkam, Defense Colony), 12 வது தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் என்ற 54 வயது ஆர்.கே. இவர், ‘எல்லாம் அவன் செயல்’, ‘அவன் இவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஆர்.கே வியாழக்கிழமை மாலை வெளியே சென்றிருந்த போது , வீட்டில் அவரது 48 வயது மனைவி ராஜி மட்டும் தனியாக இருந்தார் . அப்போது வீட்டின் பின் பக்கக் கதவு வழியாக 3 கொள்ளையர்கள் வீடு புகுந்து, ராஜியை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து , பீரோவில் இருந்த 200 சவரன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்து விட்டு தப்பிவிட்டனர். வீட்டுக்குத் திரும்பி வந்த நடிகர் ஆர்.கே தனது மனைவியை கட்டிப் போட்டிருப்பதையும், நகை, ரொக்கப்பணம் கொள்ளை போயிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப் (Nandambakkam Police) பதிவு செய்தனர். கொள்ளையர்களை பிடிக்க 10 தனிப்ப டைகள் அமைக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட விசாரணையில் ஆர்.கே வீட்டில் வேலை செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த காவலாளி தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து கொள்ளையடித்து தப்பியிருப்பது தெரியவந்தது (It was revealed that the watchman along with his 2 friends had escaped after the robbery). அவர்கள், நகைகள் மற்றும் ரொக்கப் பணத்துடன் கர்நாடக மாநிலம் பெங்களூருக்குத் தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்படையினர் பெங்களூருக்கு விரைந்துள்ளனர். ஆர்.கே வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். நடிகரின் வீட்டில் கொள்ளையடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.