5 year old girl Murder for Mango: மாம்பழம் கேட்டதற்காக 5 வயது சிறுமி கழுத்தை அறுத்துக் கொலை

சிறுமி பலமுறை மாம்பழம் கேட்டதால் கோபமடைந்த உறவினர், சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

தில்லி: 5-year-old girl was killed for asking Mango :5 வயது சிறுமி தனது உறவினரிடம் மாம்பழம் வேண்டும் என்று பலமுறை கேட்டுள்ளார். கோபமடைந்த அந்த நபர், மனிதாபிமானமற்ற முறையில் சாப்பிட மாம்பழம் கேட்டதற்காக சிறுமியின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள கெடா குர்தான் கிராமத்தில் இந்த‌ சம்பவம் நடந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர், ஷாம்லி மாவட்டத்தில் (Shamli district) உள்ள கெடா குர்தான் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது உமர்தீன். சிறுமி தொடர்ந்து பலமுறை மாம்பழம் கேட்டதால் கோபமடைந்த இவர், சிறுமியின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கி, கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியின் உடலை சாக்குப் பையில் போட்டு கட்டி, தனது வீட்டில் வைத்துள்ளார்.

கூலித் தொழிலாளியான சிறுமியின் தந்தை, தனது மகள் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் (Complaint at police station) அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உமர்தீன் கிராம மக்களுடன் சேர்ந்து சிறுமியை தேடுவது போல‌ நாடகம் ஆடி உள்ளார். ஆனால் உமர்தீனின் நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

உடனடியாக உஷார்படுத்தப்பட்ட போலீசார், உமர்தீனை கிராமத்திற்கு அருகிலுள்ள காட்டில் தேடி கைது (Arrested nearby forest) செய்தனர். அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, இரும்பு கம்பி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட‌ன. பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை உள்ளிட்ட மற்ற‌ பிரிவுகளில் உமர்தீன் மீது போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.