Rachita Ram : சாண்டல்வுட் டிம்பிள் குயின் ரச்சிதா ராம் பிறந்த‌: வீட்டின் முன் திரண்ட ரசிகர்கள்

பிரபல கன்னட நடிகை ரசிதா ராம் (Rachita Ram) பிறந்தநாள் கொண்டாட்டம். கன்னட திரையுலகில் அதிகம் தேடப்படும் நடிகைகளில் ஒருவரான ரச்சிதாவுக்கு ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பிரபல கன்னட நடிகை ரச்சிதா ராம் (Rachita Ram) பிறந்தநாள் கொண்டாட்டம். கன்னட திரையுலகில் அதிகம் தேடப்படும் நடிகைகளில் ஒருவரான ரச்சிதாவுக்கு ரசிகர்கள், உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ரசிதா ராமின் வீட்டிற்கு ரசிகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகைக்கு கேக், மாலைகள் மற்றும் பரிசுகளை வழங்கி வாழ்த்துகின்றனர். மறுபுறம், படக்குழுவினர் வெவ்வேறு போஸ்டர்கள் மூலம் “டிம்பிள் க்வின்” வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய பாரம்பரிய பரதநாட்டிய நடனக் கலைஞரான ரச்சிதா ராம் (Bharatnatyam dancer Rachita Ram), பல்வேறு இடங்களில் 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். ரச்ச்சிதா ராமின் தந்தை ஒரு இந்திய பாரம்பரிய பரதநாட்டிய கலைஞர் ஆவார். “அரசி” என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் நடிக்கத் தொடங்கிய ரச்சிதா, அதன்பின் தர்ஷன் நடித்த “புல் புல்” படத்தின் மூலம் நாயகியாக வெள்ளித்திரையில் நுழைந்தார். முதல் படத்திலேயே தனது நடிப்பில் வெற்றி பெற்றார். குறுகிய காலத்தில் கன்னட திரையுலகில் தேடப்படும் நடிகையாக வலம் வந்துள்ளார். நட்சத்திர நடிகர்களான சிவராஜ் குமார், புனித் ராஜ்குமார், சுதீப், துருவா சர்ஜா, துனியா விஜய், உபேந்திரா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து ரச்சிதா ராம் நடைத்துள்ளார்.

ரச்சிதாராம் சாண்டல்வுட்டில் நுழைந்து 9 ஆண்டுகள் ஆகின்றன‌. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரச்சிதா ராமின் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அண்மையில் வெளியான “மான்சூன் ராகா” படத்தில் விபச்சாரியாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

டோலிவுட்டிலும் ரச்சிதா ராமுக்கு வரவேற்பு இருப்பதால், வேறு மொழி சினிமாவிலும் (Other language cinema) நுழைந்துள்ளார். நட்சத்திர நடிகர்களுடன் நடிப்பது மட்டுமின்றி புதுமுக நடிகர்களுடன் பாரபட்சமின்றி நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். நடிப்புடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றியவர் ரச்சிதாராம். மஜபாரத் மற்றும் பயணங்கள் என்ற நாடக நிகழ்ச்சியின் நடுவராக இருந்து தொலைக்காட்சியிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.