Rakhi Sawant said Will fight elections in 2024: ‘‘2024ல் தேர்தலில் போட்டியிடுவேன்’’ ஹேமமாலினிக்கு ராக்கி சாவந்த் பதில்

புதுடெல்லி: “Will fight elections in 2024…” Rakhi Sawant responds to Hema Malini. 2024ல் தேர்தலில் போட்டியிடுவேன் என நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

ராக்கி சாவந்த் கூட (தேர்தல் வேட்பாளராக) ஆக முடியும் என்று நடிகரும், அரசியல்வாதியுமான ஹேமாமாலினியின் அறிக்கைக்கு பதிலளித்த ராக்கி சாவந்த், 2024 தேர்தலில் போட்டியிடுவேன் என்று கிண்டலாகவும் தீவிரமாகவும் கூறினார். இதற்காக ஹேமமாலினி மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ராக்கி சாவந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், பெரிய பொறுப்பை எனது தோள்களில் சுமத்தியதற்காகவும், இதற்கு என்னை தகுதியானவராக கருதியதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஹேமமாலினிஏற்கனவே அறிவித்தபடி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி என ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் தேநீர் தயாரித்து பிரதமர் மோடியால் பிரதமராக முடியும் என்றால், தானும் முதல்வராக முடியும் என்றும் என்னைப் பொறுத்த வரையில், நான் சிறுவயதில் இருந்தே சமுதாயத்திற்கு சேவை செய்து வருகிறேன். நான் பிறந்தது நாட்டுக்கு சேவை செய்யவே. நான் சேவை செய்ய விரும்புகிறேன், நம் பிரதமர் டீ தயாரித்து பிரதமராக முடியும், பிறகு ஏன் என்னால் முடியாது. பாலிவுட்டில் பணிபுரிந்த பிறகு முதல்வராக இருப்பீர்களா? நிச்சயமாக, உங்கள் அனைவரின் வாழ்த்துக்களும் எனக்குத் தேவை.

எனவே, நான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். ஆனால் யாருக்கு எதிராக என்பது ஆச்சரியமாக இருக்கும் என்று ராக்கி சாவந்த் தெரிவித்துள்ளார்.