Thunivu vaarisu Was Released Fans Celebrate: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியானது துணிவு, வாரிசு: ரசிகர்கள் ஆரவாரம்

சென்னை: பெரும் எதிர்பார்ர்த்திருந்த அஜித் நடிப்பில் உருவான துணிவு (Thunivu vaarisu Was Released Fans Celebrate) மற்றும் விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

சென்னையின் மிகவும் புகழ் பெற்ற திரையரங்கமாக விளங்கும் கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் நேற்று (ஜனவரி 10) இரவு 8 மணி முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கி விட்டனர். இதில் முதல் முறையாக அஜித்குமாரின் படம் சிறப்பு காட்சியாக நள்ளிரவு ஒரு மணிக்கு வெளியாகிய நிலையில் ஆயிரக்கணக்கான அஜித் ரசிகர்கள் கோயம்பேடு திரையரங்கிலும் கோயம்பேடு, மதுரவாயல் நெடுஞ்சாலையிலும் கூடியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணிக்கு விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் ரோகிணி திரையங்கில் வெளியானது. பட்டாசு வெடித்தும், தாரை தப்பட்டையுடன் சென்று படம் பார்க்கத்தொடங்கினர். அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் ஒன்று கூடியதால் பெரிய மாநாடுக்கு கூடிய கூட்டம் போலவே காட்சி அளிக்கிறது. தமிழகம் முழுவதும் இதே போன்ற நிலையை உள்ளது.