Captain Miller Shooting: ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்

சென்னை: Dhanush’s ‘Captain Miller’ shooting has resumed after a gap of a month. தனுஷுன் ‘கேப்டன் மில்லர்’ படப்பிடிப்பு ஒரு மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தனது வரவிருக்கும் படமான ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்புக்குத் திரும்பியுள்ளார். ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு, நடிகர்கள் மற்றும் குழுவினர் இறுதியாக தமிழ்நாட்டின் குற்றாலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர்.

தனுஷ் மற்றும் ‘கேப்டன் மில்லர்’ குழுவினர் படத்தின் முதல் ஷெட்யூலை கடந்த ஆண்டு டிசம்பரில் முடித்துவிட்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களுடன் கொண்டாட படக்குழு நேரம் ஒதுக்கியது. தற்போது, பொங்கல் விடுமுறை முடிவடைந்த நிலையில், அருண் மாதேஸ்வரனின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் படத்தின் இரண்டாவது ஷெட்யூலைத் தொடங்குவதற்காக திரும்பியுள்ளனர்.

‘கேப்டன் மில்லர்’ 1930 மற்றும் 1940களின் காலகட்டத்தின் பின்னணியில் ஒரு புதிரான கதைக்களத்தை கொண்டிருக்கும். தென்காசி வனப்பகுதியை மையமாக வைத்து இப்படத்தை யதார்த்தமாக வடிவமைத்துள்ளனர். பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், சிவராஜ்குமார் மற்றும் ஜான் கொக்கன் போன்ற பிரபல பெயர்கள் வரவிருக்கும் திரைப்படத்தின் நட்சத்திர நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பில் தனுஷுடன் மற்ற நடிகர்கள் இணைவார்கள். முன்னதாக, ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இது பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்றது.

அதேவேலையில், தனுஷ் சமீபத்தில் சர்வதேச படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடித்ததற்காக புகழ்பெற்றார். இந்த ஹாலிவுட் படத்தில், கிறிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லிங் மற்றும் அனா டி அர்மாஸ் போன்ற உலக நட்சத்திரங்களுடன் தனுஷ் நடித்தார். சர்வதேச திட்டத்தில் தனது நடிப்பிற்காக உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடமிருந்து தென்னக நடிகரான இவர் நிறைய பாராட்டுகளைப் பெற்றார்.

சமீபத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 50 வது படமான ‘டி 50’ ஐ தயாரிப்பதாக அறிவித்தது. அதில் அவர் நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலில் நடிக்கிறார். இந்த செய்தியை படக்குழுவினர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். விஷ்ணு விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா போன்ற நடிகர்கள் நடிக்கும் இந்த திரைப்படம் அதிரடி கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.