Allu Arjun wife birthday celebration: மனைவி பிறந்தநாளை பஞ்சாபில் கொண்டாடிய அல்லு அர்ஜூன்

சென்னை: Actor Allu Arjun celebrated his wife’s birthday in a lavish manner in Punjab. நடிகர் அல்லு அர்ஜூன் தனது மனைவியின் பிறந்த நாளை பஞ்சாபில் விமரிசையாக கொண்டாடியுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜூன் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் பான்-இந்திய திரைப்படமான ‘புஷ்பா’ படத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இந்த படம் வெளியானது. கிறிஸ்துமஸ்க்கு ஒரு வாரம் முன்பே இந்த படம் பல இந்திய மொழிகளில் வெளியானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், தனஞ்சய், சுனில், ஹரிஷ் உத்தமன், வென்னேலா கிஷோர் மற்றும் அனசூயா பரத்வாஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதுவரை திரைத்துறையில் நடிகர் அல்லு அர்ஜுன் அதிக செலவில் எடுக்கப்பட்ட படங்களில் இதுவே முதல்முறை. இந்த படம் இரு பாகங்களாக வெளியாகும். முதல் பாகமான ‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

தி ரைஸ் பாகம் – 1 முதல் மூன்று நாளில் உலகம் முழுவதும் 173 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா தி ரைஸ் திரைப்படம் உலகம் முழுவதும் முதல் வாரத்தில் மட்டும் 229 கோடி ரூபாய் வசூலித்தது. இறுதியாக 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2021 ஆம் ஆண்டில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இந்த படத்தை தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜூன் தனது மனைவி சினேகா ரெட்டியின் பிறந்தநாளை பஞ்சாப்பில் கொண்டாடியுள்ளார். அங்கு நட்சத்திர விடுதியில் தங்கிய அவர், கேக் வெட்டிக் குழந்தைகளுடன் இணைந்து பிறந்தநாளை கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்திற்கு பிறகு, குடும்பத்துடன் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற பொற்கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று அங்கு பல்வேறு பூஜைகளில் பங்கெடுத்தார்.

தற்போது அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்து, வாகா எல்லையில் உள்ள புகழ்பெற்ற எல்லைப் பாதுகாப்புப் படையினரின் தேசியக் கொடி அவிழ்க்கும் நிகழ்வை குடும்பத்துடன் கண்டுகளித்தார். மேலும் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் அல்லு அர்ஜூன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் அடுத்த பாகமான ‘புஷ்பா தி ரூல்’ படத்தின் போஸ்டரை புஷ்பா படக்குழு வெளியிட்டிந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. பூஜையில் படத்தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுகுமார் கலந்துகொண்டனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை, நடிகர்கள் தேர்வு சில நாட்களுக்கு முன் திருப்பதியில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.