Actor Vishal arranged marriages for 11 couples: 11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த விஷால்

சென்னை: Actor Vishal arranged marriages for 11 couples. சென்னையில் 11 ஏழை ஜோடிகளுக்கு நடிகர் விஷால் திருணம் செய்துவைத்தார்.

சென்னை மாத்தூரில் திருவள்ளூர் மாவட்ட விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் இன்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமண்ம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்துகொண்டு தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமணம் 3 மத முறையிலும் நடத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசை தொகுப்பை மணமக்களுக்கு விஷால் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், 11 ஏழை ஜோடிகள் திருமணத்தை நடத்தி வைத்துள்ளது பெரும் மகிழ்ச்சியடைகிறேன். 11 தங்கச்சிகளையும் மாப்பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. எனக்கு பட்டு வேட்டி, சட்டை ரொம்ப பிடிக்கும் என்பதலா, இந்த விழாவுக்கு நான் பட்டு சட்டையில் வந்துள்ளேன்.

என் மனதில் ஏழை ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் எனத் தோன்றியது. இதனால் இன்று இன்று 11 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்துள்ளேன். இது எனக்கு பெருமையாகவும், பெரும் பாக்கியமாகவும் கருதுகிறேன். இந்த 11 ஜோடிகளின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் படிப்புக்கு உதவுவேன் எனத் தெரிவித்தார்.

மேலும், நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகள் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைய உள்ளது. அந்த விழாவுக்கும் நீங்கள் எல்லோரும் வரவேண்டும். நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்து 500 கலைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்காக நான் பாடுபட்டு வருகிறேன். அவர்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி எனவும் அவர் தெரிவித்தார்.