10 crores wasted for Vanangaan: வணங்கான் படத்திற்காக வீணாய் போன ரூ.10 கோடி

சென்னை: After actor Suriya withdrew from the film Vanangaan, it has been reported that Rs. 10 crores have been spent on the film so far. வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியதையடுத்து, அந்த படத்திற்காக ரூ.10கோடி இதுவரை செலவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் பாலா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், திரைக்கதையில் சில மாற்றங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யா பொருத்தமானவராக இருக்க மாட்டார் என்று அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை பாலாவின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதையடுத்து, தேசிய விருது வென்றவர் இந்த திரைப்படத்திலிருந்து வெளியேறியதாக திரைப்படத் தயாரிப்பாளர் உறுதிப்படுத்தியதாகவும், எனது தம்பி சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற புதிய படத்தை இயக்க விரும்பினேன். ஆனால் கதையில் ஏற்பட்ட சில மாற்றங்களால் இந்தக் கதை சூர்யாவுக்குப் பொருந்துமா என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. அவருக்கு என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கை இருக்கிறது. இவ்வளவு அன்பும், மரியாதையும், நம்பிக்கையும் கொண்ட என் தம்பிக்கு ஒரு சிறு சங்கடத்தை கூட ஏற்படுத்தக்கூடாது என்பது ஒரு சகோதரனாக என் கடமை.

எனவே, நடிகர் சூர்யா திட்டத்தில் இருந்து விலக வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட அனைவரின் நலன்களுக்காகவும் சூர்யாவும் நானும் முடிவு செய்துள்ளோம். உண்மையில், சூர்யா இந்த முடிவைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் இது என் சகோதரனின் அதிக நன்மைக்காக செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், “வணங்கான்” படத்தில் இருந்து சூர்யா விலகுவது குறித்து விவாதிக்கப்பட்டு ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாகவும், எதிர்காலத்தில் இன்னொரு படத்திற்கு நிச்சயம் ஒத்துழைப்போம் என்றும் அவர் கூறினார். ‘நந்தா’ படத்தில் நான் பார்த்த சூர்யாவும், ‘பிதாமகன்’ படத்தில் நீங்கள் பார்த்த சூர்யாவும் இன்னொரு தருணத்தில் நிச்சயம் இணைவார்கள். இல்லையெனில் ‘வணங்கன்’ படப்பிடிப்பு தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இது ஒருபுறம் இருந்தாலும், வணங்கான் படத்தை கைவிடப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளாராம் பாலா, நடிகர் சூர்யா விலகினாலும், எஞ்சியுள்ள யாரும் இப்படத்திலிருந்து விலகவில்லை என கூறப்படுகிறது. ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டியும், இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷும் தொடர்கிறார்கள் என்றும், சூர்யாவுக்கு பதில் அதர்வாவை நடிக்க வைக்க பாலா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

வணங்கான் படத்தில் சூர்யா நடித்த காட்சிகளை கிட்டத்தட்ட ஒருமாதம் படமாக்கினார் பாலா. கடந்த மார்ச் மாதம் கன்னியாகுமரியில் இப்படத்தின் ஷூட்டிங் நடத்தப்பட்டது. ஷூட்டிங் நடந்த போதெல்லாம் அதில் பணியாற்றிய அனைவருக்கும் எந்தவித தாமதமும் இன்றி சம்பளத்தை வழங்கி வந்ததாம் சூர்யாவின் 2டி நிறுவனம்.

இந்த நிலையில், வணங்கான் படத்துக்காக சூர்யாவின் 2டி நிறுவனம் செலவு செய்த பெரும் தொகை எவ்வளவு என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்காக ரூ.10 கோடியை அந்நிறுவனம் செல்வு செய்துள்ளதாம். தற்போது படத்திலிருந்து சூர்யாவே விலகி விட்டதால் அந்த 10 கோடி ரூபாயும் பாழாய் போனதாக கூறப்படுகிறது. பாலாவை நம்பி போட்ட பணம் இப்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம் நடிகர் சூர்யா.