இன்றைய பங்குசந்தை நிலவரம் !

sensex and nifty
இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இன்றைய பங்குச்சந்தை முடிவில் சென்செக்ஸ் முதன்முறையாக 59000 புள்ளிகளைக் கடந்தது. ​வர்த்தக முடிவில் 418 புள்ளிகள் உயர்வுடன் 59,141 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. நிஃப்டி அதிகபட்சமாக 17,645 வரை உயர்ந்தது. வர்த்தக முடிவில் 107 புள்ளிகள் உயர்வுடன் 17,626 புள்ளிகளில் வர்த்தகமானது.

இன்றைய பங்குசந்தையில் 16 பங்குகள் நல்ல ஏற்றத்தை கண்டன இதில் இண்டஸ்இந்த் வங்கி, ஐடிசி, எஸ்பிஐ, மற்றும் ரிலையன்ஸ் ஆகியவை உயர்ந்து காணப்பட்டன.

மேலும் டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், டிசிஎஸ், மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவை கண்டன.