7 Month Old Child Was Electrocuted: மின்சாரம் தாக்கி 7 மாத குழந்தை உயிரிழப்பு

சென்னை: சென்னை மாதவரம் பால்பண்ணை, (7 Month Old Child Was Electrocuted)மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியை சேர்ந்தவர் சாம்சன். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி புஷ்பராணி. இந்த தம்பதிக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

வழக்கம் போல நேற்று (டிசம்பர் 22) காலை சாம்சன் வேலைக்கு சென்றுள்ளார். குழந்தை வீட்டில் அறையில் விளையாடிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் புஷ்பராணி சமையல் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தொலைக்காட்சி அருகே இருந்த மின்சார பெட்டியை குழந்தை தொட்டுள்ளது அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்துள்ளது. இதன் பின்னர் குழந்தை சத்தம் இல்லாததால் தாய் புஷ்பராணி சென்று பார்த்தபோது குழந்தை மயங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அருகாமையில் இருப்பவர்களின் உதவியுடன் குழந்தையை தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவர்கள் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை கேட்ட தாய் புஷ்பராணி மற்றும் அவரது குடும்பத்தார் கதறி அழுதனர். இது தொடர்பாக மாதவர் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி உயிரிழப்பு: சென்னை துரைப்பாக்கம் வேம்புலி அம்மன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் 24, இவர் காய்கறி கடை வைத்துள்ளார். வழக்கம் போல நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது நீலாங்கரை பேருந்து நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பு சுவற்றில் மோதியுள்ளார். இதில் தலையில் பலமான காயம் ஏற்பட்டுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக அடையார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முந்தைய செய்தியை பார்க்க:No Special Class: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை அதிரடி

முந்தைய செய்தியை பார்க்க:Wants To End Ukraine War: எங்களின் இலக்கு உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: ரஷ்ய அதிர் புதின் பேச்சு