Ban hijab: சமீபகாலமாக மாணவர்களுக்கு இடையே மதமாற்றம் குறித்து பல சர்ச்சைகள் நடந்து வருகிறது. குறிப்பாக நமது தமிழகத்தில் தஞ்சாவூர் மாணவியின் தற்கொலை பெரும் பரபரப்பை உருவாக்கியது.
மதமாற்றம் செய்யும்படி மாணவியை வற்புறுத்தி கூறியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி தமிழகத்தையே உளுக்கியது. அதுவே இன்றுவரை முடியாத நிலையில் அதற்கடுத்ததாக கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு தடை விதித்தனர். அந்த செயலும் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் பி.யூ கல்லூரியில் படிக்கும் சில முஸ்லிம் மாணவர்கள் வகுப்பறைக்குள் பர்தா அணிந்து வந்துள்ளனர். அவர்கள் பர்தா அணிந்து வந்ததால் மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை.
இதன் விளைவாக அந்த முஸ்லிம் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து தர்ணா போராட்டம் நடத்தினர். அத்தோடு தாங்கள் படிக்கும் கல்லூரி நிர்வாகம் தங்கள் அணியும் உடை சம்பந்தமான காரியங்களில் தலையிடுவதாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: TN schools: பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அதிரடி உத்தரவு