Rahul Gandhi: 8 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளது- ராகுல் காந்தி ட்வீட்

ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Rahul Gandhi: 8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோல் இந்திய நிறுவனத்திற்கும், இந்திய ரயில்வே துறைக்கும் இடையேயான முரண்பாடுகளைத் தவிா்த்து, நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கக்கோரி, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் 8 நாட்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டு வந்து மத்திய அரசு நிறுத்தியுள்ளது என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட அவர் கூறியதாவது:-

8 ஆண்டுகளாக பேசிய பேச்சுக்கள், 8 நாள்கள் மட்டுமே நிலக்கரி கையிருப்பு என்ற நிலைமைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

நமது நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின்வெட்டு காரணமாக சிறு தொழில்கள் நசுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது மேலும் வேலை இழப்புக்கு வழிவகுக்கும். எனவே, பிரதமர் மோடி அவர்களே, வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்திவிட்டு, மின் உற்பத்தி நிலையங்களை திறக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Alia Bhatt: திருமணம் நடந்த ஒரு வாரத்திற்குள் ஆலியா பட் எடுத்த அதிர்ச்சி முடிவு