முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயை சேர்க்க ஓபிஎஸ் வலியுறுத்தல் !

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை நோய் மக்களை அச்சுறுத்தி வருகிறது.

மூக்கில் இருந்து ரத்தம் வடிதல், கருப்பு நிறத்தில் ரத்தம் வடிவது இதன் அறிகுறிகள். தமிழகத்தில் இதுவரை கருப்புப் பூஞ்சை நோய்க்கு, 400 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தினை போதுமான அளவில் இருப்பு வைத்துக் கொள்ளவும், இந்நோயினை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொண்டுள்ளார்