ஜெயலலிதா நினைவிடத்தை 27-ந்தேதி திறக்க திட்டம்

தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந்தேதி மரணம் அடைந்தார்.

அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் பிரமாண்ட நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

பீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் நினைவிடத்தை அமைக்க வடிவமைப்பு செய்யப்பட்டது. இதன் அடிக்கல் நாட்டு விழா 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந்தேதி நடந்தது.

வருகிற 26-ந்தேதி அல்லது 27-ந்தேதி நினைவிடத்தை திறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 27-ந்தேதி முகூர்த்த நாளாகும். எனவே அன்றைய தினமே திறக்கலாம் என்று திட்டமிட்டுள்ளார்கள்.