சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து

cbse-class-12-term-1-announcement
CBSE 12 ஆம் வகுப்பு பருவம் 1

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலைவரிசை மிகப்பெரிய அளவில் பரவி உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூடியது. இதில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

பிரதமர் மோடி இதுகுறித்து கூறுகையில் ‘‘மாணவர்களின் உடல்நிலை, பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ள முடியாது. மாணவர்கள் நலன்கருதி தேர்வு ரத்து. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் எழுந்த பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ளது’’ என்றார்.