Telangana Governor Tamilisai’s father admitted to hospital: தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் தந்தை மருத்துவமனையில் அனுமதி

சென்னை: Telangana Governor Tamilisai’s father admitted to hospital. தெலங்கானா ஆளுநரின் தந்தையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சியின் மூத்த தலைவருமானவர் குமரி அனந்தன் (வயது 90) மூச்சு திணறல் காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் குமரி அனந்தன் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை மருத்துவர்கள் குழு தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்து மருந்து மாத்திரைகளை கொடுத்து சிகிச்சையளித்து வருகின்றனர். அவரின் உடல் நிலை முன்னேற்றத்தை பொறுத்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

குமரி அனந்தன் மகள் தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவின் தமிழ் மாநில முன்னாள் தலைவராக இருந்தார். தற்போது தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக இருந்து வருகிறார்.

சென்னையில் வசித்து வரும் குமரி அனந்தன், அரசு சார்பில் தனக்கு வீடு ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர், தமிழ்நாடு மக்களுக்காக நிறைய பாதயாத்திரை போராட்டங்களை சந்தித்தவர் என்கிற முறையில் அண்மையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். குமரி அனந்தனுக்கு சென்னை அண்ணா நகரில் உள்ள அரசு குடியிருப்பில் வீடு வழங்கி அதற்கான ஆணையை அவரிடம் வழங்கினார்.